ஆபாசத்தின் உச்சியில் கலைஞர் TV.
விஜய் டிவி நடத்தி வந்த நடனப் போட்டி நிகழ்ச்சி ஜோடி நம்பர் – 1 ஐத் தொடர்ந்து சன் டீவி, கலைஞர் டீவி போன்றவையும் அதே போன்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்து விட்டன. ஒவ்வொறு டிவி நிறுவனத்தினரும் கணிசமான தொகையை பரிசாக அறிவித்து நிகழ்ச்சியும் ஜெஜெ என நடந்து கொண்டிருக்கின்றது.
இதில் கலைஞர் டிவி நடத்தும் நடன நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நடிகை சிம்ரன் ஆகியோர் இருந்து வந்தனர். என்ன காரணத்தாலோ திடீரென சிம்ரன் நடுவர் பதவியிலிருந்து நின்றுவிட (or) நிறுத்தப்பட்டுவிட நடிகை நமீதா நடுவர் இருக்கையைப் பிடித்துக்கொண்டார். எந்த நடிகை நடுவரா இருந்தா உனக்கென்னெய்யா வந்தது என நீங்கள் கேட்பது புரிகின்றது.
நமீதா நடுவராக வந்த நாளில் இருந்து அவரது உடை நம் மனதை என்னவோ செய்து கொண்டிருந்தது. அதுவும் நேற்று 21.10.2007-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நமீதா அணிந்து வந்திருந்த பேபி பிராக், மன்னிக்கவும் சீதுரூ பேபி பிராக் மனதை ரணப்படுத்தியது என்பதோடு அவர் அந்த உடையை உடுத்திக்கொண்டு உடலை அசைக்க முடியாமல் அசைத்தது ஆபாசத்தின் எல்லை....என்றே சொல்ல வேண்டும்.
கலைஞர் டீவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை கலைஞர் பார்த்து ஒப்புதல் அளித்தப்பின் தான் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது என்பது பத்திரிகை செய்தி. அப்படியிருக்க இந்த நிகழ்ச்சியையும் கலைஞர், தமிழ் பண்பாட்டுக் காவலர் பார்த்து இரசித்து அதன்பின் தான் ஒளிபரப்பினார்களா?... அல்லது பண்பாட்டுக் காவலரின் கண்களில் காட்டப்படாமலேயே ஒளி பரப்பிவிட்டார்களா?....
இந்த நிகழ்ச்சியை கலைஞர் பார்த்து இரசித்து அதன் பின் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டு இருந்தால் வாழ்க தமிழ், வாழ்க தமிழர் பண்பாடு, நீடூடி வாழ்க தமிழ் பண்பாட்டுக் காவலர்.
இந்த நிகழ்ச்சியை கலைஞர் கண்களுக்கு காட்டாமலேயே ஒளி பரப்பியிருந்தார்களானால் நிகழ்ச்சியின் தரத்தை கண்காணித்து தமிழ் காவலர் தமிழனின் மானத்தை கப்பலேற்றாமல் இருக்க ஆவன செய்வது நல்லது. (நான் மட்டுமா என் டீவில காட்டுரேன்... ஊருல உள்ளவன்லா காட்ரான்பா என பதில் கூறிவிடாதீர்கள் தமிழ் காவலரே....)
கலைஞர் டீவி நிர்வாகத்திற்கும் கலைஞருக்கும் சில கேள்விகள்:
1. சிம்ரன் ஆடைகுறைப்பு செய்யாததனால் தான் அவரை நீக்கினீர்களா?...
2. நிகழ்ச்சியில் ஆடுபவர் ஆடைகுறைத்தால் பரவாயில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம், நடுவரையே ஆடைகுறைப்பு செய்ய வைப்பது முறையா?.
நமீதாவிற்கு சில அறிவுறுத்தல்கள்.
1. Miss. நமீதா நடுவராக மட்டும் இருந்தால் போதாது. நடுவருக்கான கண்ணியத்தைக் காக்கும் உடைகளையும் அணியக்கற்றுக் கொள்ளுங்கள்.
2. தமிழில் பேச முயன்றால் மட்டும் போதாது. தமிழ் கலாச்சாரப்படி தமிழ் நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளப்பழகுங்கள்.
Monday, October 22, 2007
ஆபாசத்தின் உச்சியில் கலைஞர் TV....
Monday, October 08, 2007
சரத் நீங்களுமா?!....
“சிறுவர்கள் தான் தொப்புளில் பம்பரம் விட்டு விளையாடுவார்கள். ஆனால் பெண்களின் தொப்புளில் பம்பரம் விட்டவர் ஆட்சி அமைக்கப் போவதாக கூறுகிறார். இதைப் பற்றி வேறெதுவும் நான் சொல்ல விரும்பவில்லை" (சரத்குமார்).
அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்கள் ஏதோ புரட்சியைச் செய்து விடப்போவதாக பரபரப்பாகத்தான் அரசியல் அரங்கத்தில் நுளைகின்றார்கள். ஆரம்பகாலத்தில் அவர்களின் சரவெடிகளும் காரசாரமாகவே இருக்கின்றது. மக்களுக்கும் இவர்களாவது நல்ல அரசியல் வாதியாக நல்ல ஆட்சியைத் தருபவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை மனதில் எழத்தான் செய்கின்றது.
ஆனால் பரிதாபம் சிரிது நாட்களிலேயே நமத்துப்போய் நாங்களும் பழைய பட்டாசுகள் தான் ஏற்கனவே இருந்த குட்டையில் ஊரிய புதிய ஆனால் அதே பழைய குணம் கொண்ட மட்டைகள் தான் என நிரூபித்து மக்களின் மனதில் ஒவ்வொரு முறையும் தளிர்க்கும் நம்பிக்கை விருட்சத்தின் தளிர்களை நசுக்கிவிடுகின்றார்கள்.
அதனால் தான் பாமரர்களும் படித்தவர்களும் அரசியல் என்றால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றும் தீண்டத்தகாத ஒன்று என்றும் எண்ணத் தலைப்பட்டு பல காலமாகிவிட்டது.
நடிகர் சரத்குமார் அரசியலுக்கு வந்த உடன் அவர்மேலும் அதே நம்பிக்கை தெரிவதாகவே நம்பினேன். இந்த மட்டையாவது தனக்கான புதிய குளத்தை அமைத்துக் கொள்ளும் என சின்ன நம்பிக்கை இருந்தது. அவரது நடவடிக்கைகளும் நம்பிக்கை ஊட்டுவதாகவே இருந்தது.
ஆனால் மேலே உள்ள அவரது பேச்சு அவரும் பழைய குட்டையில் ஊரிய பழைய குணம் மாறாத புதிய மட்டை என்பதை பறைசாற்றுவதாகவே செய்கின்றது.
அரசியல் நாகரீகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் சரத். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
சரத்திற்கு ஒரு கேள்வி: காமுகர்கள் தான் பெண்களை கர்ப்பழிப்பார்கள், மானபங்கம் செய்வார்கள்... பெண்களை கர்ப்பழித்தவர்கள் அடுத்த முதல்வர் நான் தான் எனக்கூறுவது சரியா?! சரத்.
அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்கள் ஏதோ புரட்சியைச் செய்து விடப்போவதாக பரபரப்பாகத்தான் அரசியல் அரங்கத்தில் நுளைகின்றார்கள். ஆரம்பகாலத்தில் அவர்களின் சரவெடிகளும் காரசாரமாகவே இருக்கின்றது. மக்களுக்கும் இவர்களாவது நல்ல அரசியல் வாதியாக நல்ல ஆட்சியைத் தருபவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை மனதில் எழத்தான் செய்கின்றது.
ஆனால் பரிதாபம் சிரிது நாட்களிலேயே நமத்துப்போய் நாங்களும் பழைய பட்டாசுகள் தான் ஏற்கனவே இருந்த குட்டையில் ஊரிய புதிய ஆனால் அதே பழைய குணம் கொண்ட மட்டைகள் தான் என நிரூபித்து மக்களின் மனதில் ஒவ்வொரு முறையும் தளிர்க்கும் நம்பிக்கை விருட்சத்தின் தளிர்களை நசுக்கிவிடுகின்றார்கள்.
அதனால் தான் பாமரர்களும் படித்தவர்களும் அரசியல் என்றால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றும் தீண்டத்தகாத ஒன்று என்றும் எண்ணத் தலைப்பட்டு பல காலமாகிவிட்டது.
நடிகர் சரத்குமார் அரசியலுக்கு வந்த உடன் அவர்மேலும் அதே நம்பிக்கை தெரிவதாகவே நம்பினேன். இந்த மட்டையாவது தனக்கான புதிய குளத்தை அமைத்துக் கொள்ளும் என சின்ன நம்பிக்கை இருந்தது. அவரது நடவடிக்கைகளும் நம்பிக்கை ஊட்டுவதாகவே இருந்தது.
ஆனால் மேலே உள்ள அவரது பேச்சு அவரும் பழைய குட்டையில் ஊரிய பழைய குணம் மாறாத புதிய மட்டை என்பதை பறைசாற்றுவதாகவே செய்கின்றது.
அரசியல் நாகரீகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் சரத். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
சரத்திற்கு ஒரு கேள்வி: காமுகர்கள் தான் பெண்களை கர்ப்பழிப்பார்கள், மானபங்கம் செய்வார்கள்... பெண்களை கர்ப்பழித்தவர்கள் அடுத்த முதல்வர் நான் தான் எனக்கூறுவது சரியா?! சரத்.
Subscribe to:
Posts (Atom)
