“சிறுவர்கள் தான் தொப்புளில் பம்பரம் விட்டு விளையாடுவார்கள். ஆனால் பெண்களின் தொப்புளில் பம்பரம் விட்டவர் ஆட்சி அமைக்கப் போவதாக கூறுகிறார். இதைப் பற்றி வேறெதுவும் நான் சொல்ல விரும்பவில்லை" (சரத்குமார்).
அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்கள் ஏதோ புரட்சியைச் செய்து விடப்போவதாக பரபரப்பாகத்தான் அரசியல் அரங்கத்தில் நுளைகின்றார்கள். ஆரம்பகாலத்தில் அவர்களின் சரவெடிகளும் காரசாரமாகவே இருக்கின்றது. மக்களுக்கும் இவர்களாவது நல்ல அரசியல் வாதியாக நல்ல ஆட்சியைத் தருபவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை மனதில் எழத்தான் செய்கின்றது.
ஆனால் பரிதாபம் சிரிது நாட்களிலேயே நமத்துப்போய் நாங்களும் பழைய பட்டாசுகள் தான் ஏற்கனவே இருந்த குட்டையில் ஊரிய புதிய ஆனால் அதே பழைய குணம் கொண்ட மட்டைகள் தான் என நிரூபித்து மக்களின் மனதில் ஒவ்வொரு முறையும் தளிர்க்கும் நம்பிக்கை விருட்சத்தின் தளிர்களை நசுக்கிவிடுகின்றார்கள்.
அதனால் தான் பாமரர்களும் படித்தவர்களும் அரசியல் என்றால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றும் தீண்டத்தகாத ஒன்று என்றும் எண்ணத் தலைப்பட்டு பல காலமாகிவிட்டது.
நடிகர் சரத்குமார் அரசியலுக்கு வந்த உடன் அவர்மேலும் அதே நம்பிக்கை தெரிவதாகவே நம்பினேன். இந்த மட்டையாவது தனக்கான புதிய குளத்தை அமைத்துக் கொள்ளும் என சின்ன நம்பிக்கை இருந்தது. அவரது நடவடிக்கைகளும் நம்பிக்கை ஊட்டுவதாகவே இருந்தது.
ஆனால் மேலே உள்ள அவரது பேச்சு அவரும் பழைய குட்டையில் ஊரிய பழைய குணம் மாறாத புதிய மட்டை என்பதை பறைசாற்றுவதாகவே செய்கின்றது.
அரசியல் நாகரீகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் சரத். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
சரத்திற்கு ஒரு கேள்வி: காமுகர்கள் தான் பெண்களை கர்ப்பழிப்பார்கள், மானபங்கம் செய்வார்கள்... பெண்களை கர்ப்பழித்தவர்கள் அடுத்த முதல்வர் நான் தான் எனக்கூறுவது சரியா?! சரத்.
அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்கள் ஏதோ புரட்சியைச் செய்து விடப்போவதாக பரபரப்பாகத்தான் அரசியல் அரங்கத்தில் நுளைகின்றார்கள். ஆரம்பகாலத்தில் அவர்களின் சரவெடிகளும் காரசாரமாகவே இருக்கின்றது. மக்களுக்கும் இவர்களாவது நல்ல அரசியல் வாதியாக நல்ல ஆட்சியைத் தருபவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை மனதில் எழத்தான் செய்கின்றது.
ஆனால் பரிதாபம் சிரிது நாட்களிலேயே நமத்துப்போய் நாங்களும் பழைய பட்டாசுகள் தான் ஏற்கனவே இருந்த குட்டையில் ஊரிய புதிய ஆனால் அதே பழைய குணம் கொண்ட மட்டைகள் தான் என நிரூபித்து மக்களின் மனதில் ஒவ்வொரு முறையும் தளிர்க்கும் நம்பிக்கை விருட்சத்தின் தளிர்களை நசுக்கிவிடுகின்றார்கள்.
அதனால் தான் பாமரர்களும் படித்தவர்களும் அரசியல் என்றால் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றும் தீண்டத்தகாத ஒன்று என்றும் எண்ணத் தலைப்பட்டு பல காலமாகிவிட்டது.
நடிகர் சரத்குமார் அரசியலுக்கு வந்த உடன் அவர்மேலும் அதே நம்பிக்கை தெரிவதாகவே நம்பினேன். இந்த மட்டையாவது தனக்கான புதிய குளத்தை அமைத்துக் கொள்ளும் என சின்ன நம்பிக்கை இருந்தது. அவரது நடவடிக்கைகளும் நம்பிக்கை ஊட்டுவதாகவே இருந்தது.
ஆனால் மேலே உள்ள அவரது பேச்சு அவரும் பழைய குட்டையில் ஊரிய பழைய குணம் மாறாத புதிய மட்டை என்பதை பறைசாற்றுவதாகவே செய்கின்றது.
அரசியல் நாகரீகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் சரத். உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
சரத்திற்கு ஒரு கேள்வி: காமுகர்கள் தான் பெண்களை கர்ப்பழிப்பார்கள், மானபங்கம் செய்வார்கள்... பெண்களை கர்ப்பழித்தவர்கள் அடுத்த முதல்வர் நான் தான் எனக்கூறுவது சரியா?! சரத்.

No comments:
Post a Comment